நம்மில் ஒருவர்
கோவை கரும்புக்கடை பகுதியில் வசித்துவரும் இவர் பெயர் முஸ்தபா. ஒரு சமூக சேவகர். கோவையில் தொடர்ந்து பல நல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
காலைத் தொழுகை மற்றும் சொந்தக் கடமைகளை முடித்ததும் அரசு மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைச் சந்திப்பது, அவர்களுக்கான பிரார்த்தனை செய்வது, சிக்னலில் நின்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை கையில் பதாகையுடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது
இஸ்லாம் கூறும் நல்லுபதேசத்தைப் பிற சமய சகோதரர்களுக்கு எடுத்துரைப்பது இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடுவது என்ற ஆழமான இறை நம்பிக்கையின் வெளிப்பாடாய்த் தன் செயலால் சமூகத்தின்பால் உள்ள அக்கறையால் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து நல்லதொரு உதாரணமாய் கோவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவது.. ஆதரவற்ற மக்களைச் சந்தித்து அவருடைய தேவைகளை நிறைவேற்றுவது.. பார்வையற்ற மக்களின் நலன் கருதி அவர்களுக்கு உதவி செய்வது.. அத்தியாவசியத் தேவை உள்ள மக்களின் நலன்களை அக்கறை கொள்வது.. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது.. மரங்கள் மரக்கன்றுகள் நட்டு வைப்பது.. நபிகளாரின் பொன்மொழிகளை கற்றுக் கொடுப்பது.. உருது, அரபி மொழிகளைக் கற்றுத் தருவது.. வசதி இல்லாத மக்களை சந்தித்து அவர்களுக்கு சிறு சிறு உதவி செய்வது.. இன்னும் சமூக பணிகளில் அக்கறை கொண்டு, இந்த சமூகத்தை நல்ல சமூகமாக மாற்ற முயற்சி செய்வது.
இது போன்ற சமூகப் பணிகளை செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆனும் சொல்கிறது. இறுதி இறைத் தூதரும் சொல்கின்றார்கள். ஆகவே அதனை நாம் ஒரு நல்ல தகவலை எடுத்துக்கொண்டுச் செயலாற்ற வேண்டும் என்ற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் முழு நேரமாக சமூகசேவகர் என்ற அடிப்படையில் தன் பணியை செம்மையாக செய்து வருகிறார்.