Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தலாம்.-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
Nov 11 2022 நாடும் நடப்பும்

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தலாம்.-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் பாதுகாப்புக்காக போலீஸாரை நிறுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது..

மதுரையைச் சேர்ந்த விக்டோரியா என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரையில் சில நாட்களுககு முன்பு அரசு மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி முன்பு மாணவி ஒருவரின் தந்தையை ஒரு நபர் கடுமையாக தாக்கினார். இதைப் பார்த்து மாணவிகள் பயந்து கல்லூரிக்குள் ஓடினர். மதுரையில் மற்றொரு  தனியார் பெண்கள் கல்லூரியிலும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அத்துமீறி நுழைந்து மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றனர்.

இவ்விரு சமபவங்கள் தொடர்பான வீடியோக்கள் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களால் மகளிர் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் 8 மாநிலங்களில் அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்புக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாசலில் மாணவிகள் பாதுகாப்பு பணிக்கு போலீஸாரை நியமிக்க உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், "மாணவிகள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மாணவிகள் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஐபி பாதுகாப்பு போன்ற பாதுகாப்பு பணியின்போது 10 அடிக்கு ஒரு காவலர் நிறுத்தப்படுவது போல், மகளிர் கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்புக்கும் காவலர்களை நிறுத்தலாம்" என்றனர்.

பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அவர்களை அச்சப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை.

Related News