நவம்பர் 15: இன்று பழங்குடியினப் போராளி பிர்ஸா முண்டா பிறந்தநாள்!
ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நில உரிமையாளர்களிடமும் பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர்.
தற்போதைய பிஹார், ஜார்கண்டைச் சேர்ந்த பழங்குடியினரின் விடுதலைக்காக முதன்முதலில் கிளர்ந்தெழுந்த இளம் போராளி பிர்சா முண்டா, 1875 நவம்பர் 15-ல் பிறந்தார்.
பழங்குடித் தலைவர்களிலேயே இவருடைய உருவச் சிலைதான் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலை., ஜார்க்கண்டில் பிர்ஸா முண்டா விமான நிலையம், பிர்ஸா தொழில்நுட்ப மையம், பிர்ஸா முண்டா தடகள விளையாட்டரங்கம் உள்ளிட்டவை இவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன.
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்று போராடிய பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள் பழங்குடியினர் பெருமை நாள் - 'ஜன்ஜாதிய கௌரவ் திவஸ்' எனக் கடைபிடிக்கப்படுகிறது.