Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

உயிர்க்குப் போராடிய சுரங்க தொழிலாளர்கள்  வீட்டுக்கு அனுப்பி வைத்த எலி வளை மீட்புக்குழு! தலைமை தாங்கிய வகீல் ஹாசனுக்கு நேர்ந்த கதி !! நன்றி விஸ்வாசத்தைக் காட்டிய மோடி அரசு!!!
நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் DME., Mar 01 2024 செய்திகள்

உயிர்க்குப் போராடிய சுரங்க தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்த எலி வளை மீட்புக்குழு! தலைமை தாங்கிய வகீல் ஹாசனுக்கு நேர்ந்த கதி !! நன்றி விஸ்வாசத்தைக் காட்டிய மோடி அரசு!!!

டெல்லி பிப் 27

17 நாள் போராட்டம்,சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணி. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் 47 மீட்டர் தொலைவு அளவில் துளையிட்டு இயந்திரம் உடைந்தது. இந்தியாவின் தொழில்நுட்பத்துக்குச் சவாலாக மீட்புப்பணி உருவாகியது.

இவை அனைத்தும்  உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு சுரங்கம் தோண்டும் பணியில் நடந்தது.

வழக்கம்போல் சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்கத் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் அங்குக் குவிந்தனர்.

இதற்கிடையில், தொழிலாளர்கள் சீராக இருக்க, குழாய் மூலமாக உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 2 வாரத்துக்கு மேலாக நீடித்து வந்தும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவர்கள் காப்பாற்றப்படுவது உத்தரகாண்ட் அரசுக்கும், மத்திய மோடி அரசுக்கும் சவாலானது.

இந்த நிலையில் தான், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் எனப்படும் சிறிய குகைக்குள்ளும் சென்று துளையிடும் அனுபவம் வாய்ந்த 12 சுரங்கப்பணியாளர்கள் மீதமுள்ள 13 மீட்டர் பாதையை 21 மணி நேரத்தில் துளையிட்டு முடித்தனர். 

இதனைத் தொடர்ந்து  சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வந்தனர். இந்த மீட்புப் பணிக்கும் பேருதவியாக இருந்த எலி வளை தொழிலாளர்களுக்கு நாட்டு மக்களிடம் பாராட்டுகள் குவிந்தன.

தங்கள் உயிரைப் பணயம் வைத்த, எலிவளை சுரங்கத் தொழிலாளர் ஒருவர் வீட்டை டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் வகீல் ஹாசன். இவர் டெல்லி கஜோரி காஸ் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், டெல்லி மேம்பாட்டு ஆணையம், கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறிப் பல வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த இடிப்பு நடவடிக்கை பணியில், வகீல் ஹாசனின் வீடும் இடித்து தரைமட்டமானது. இதனால், வகீல் ஹாசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்போது சாலையோரத்தில் தங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய வகீல் ஹாசன்,இங்குப் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீடுகளை இடிப்பது தொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய முன்னறிவிப்பின்றி எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

புல்டோசர் மூலம் வீட்டை இடித்து மோடி அரசு நன்றி விஸ்வாசம் காட்டியுள்ளது.இது தற்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News