Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

வாழ்வியல் சிந்தனை
Oct 27 2022 வாழ்வியல்

வாழ்வியல் சிந்தனை

உலகத்தையே ஜெயிக்க நினைத்த ஃபிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்

 

போரில் தோல்வி அடைந்த ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது...

சிறையில் மன் உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது..

அவரைப் பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து "இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும்; தனிமையைப் போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறைபடுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த நெப்போலியனுக்குச் சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார்.

பிற்காலத்தில் ஃபிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.

அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்தக் குறிப்பு சொல்லி இருந்தது..ஆனால் அவரின் மனஉளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையைச் செயல்படாமல் வைத்து, அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.

உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி. ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.

மாவீரனுக்கும் சரி, சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையைச் செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.

மனம் அமைதியாக இருந்தால் பிரச்சனையை எதிர்நோக்கும் சிந்தனை சிறப்பாகச் செயல்படும்.