Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு
மு.முகம்மது உதுமான் யாசீர் Nov 04 2023 அண்மைச் செய்திகள்

திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சியும் நிலவி வருகின்றது. இதன்காரணமாக தமிழகம், கேரளம், புதுச்சேரியில் நாளை கன முதல் மிகக் கனமழைக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர்-4 (நாளை)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 4(சனிக்கிழமை) தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related News