Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஊக்கம் தரும் தாக்கம். Part-2
Sep 27 2024 MAAHMA

ஊக்கம் தரும் தாக்கம். Part-2

உளவியலில் ஊக்கத்தேவைகள் ஆறு என மாஸ்கோ அவர்கள்வகுத்துள்ளார்கள்.

 

அவை

 

1.உடலியல் தேவை

 

2.பாதுகாப்புத் தேவை

 

3.அன்புத் தேவை

 

4.கணிப்புத் தேவை

 

5.சுயத்திறனியல் நிறைவுத் தேவை

 

6.சுயதிருப்தித் தேவைகள் (நுண்ணறிவு)

  

மூன்று தேவைகளை பாகம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான link வும் கீழே தரப்பட்டுள்ளது. படிக்காதவர்கள் முதலில்  அதை படித்துவிட்டு பிறகு இதை படிக்கலாம்.

 

பாகம் 1- இதோ :- ஊக்கம் தரும் தாக்கம்.

 

3.கணிப்புத்தேவை

 

மாணவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாவரும் தம் வாழ்வில் வரவேற்பு, கீர்த்தி, புகழ் , மதிப்பு ஆகியவைகளைஎதிர்பார்க்க கூடயவர்களாகவே இருக்கின்றனர். எனவே ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் அவர்களைமுதன்மைப்படுத்தி, அவர்களின் பெயர் சொல்லி அழைப்பது, தக்க சமயத்தில் பாராட்டுவது, சரியானமுறையில் அவர்களை கணிப்பதை செய்ய வேண்டும். மாணவர்களின் ஊக்கத்திற்க்கு இது பெரும் மாற்றத்தைஏற்படுத்தும். படிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை தரும் முன்னும் இதைப்பற்றி யோசிக்க வேண்டும். அவர்களின் திறமையை குறித்து நல்ல ஏதாவது ஒன்றைக்கூறி பாராட்டிய பிறகு, இதே கவனத்தை படிப்பிலும்செலுத்தினால் மாணவனின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என எல்லோர் முன்னிலையிலும் கூறலாம். முதலில் நிறைய பாராட்டிவிட்டு பிறகு அந்த மாணவனின் குறைகளை சொற்பமாக கூறி அவர்களைமாற்றலாம். தண்டனை தரும் சமயங்களிலும் அவர்களுக்கு உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் காலம்முழுவதும் மறக்க முடியாத அதிர்ச்சி தராமல் இலகுவாக அவர்களை கையாளலாம்.

 வகுப்புகளில் வகுப்புத்தலைவர், விளையாட்டுக்கென்ற ஒரு தலைவர் பதவிகளை வழங்கி கௌரவிக்கலாம். கூட்டங்கள், மன்றங்கள் , ஆண்டுவிழாக்களில் அவர்களின்பெயர் சொல்லி அவர்களை பாராட்டலாம். இதனால் அவர்களுக்கு ஒரு மதிப்பு வந்தத்தாக உணர்வார்கள். ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகளை அதுதொடர்பாக பாரட்டும்போது வாழ்நாள் முழுவதும் அதைப்பின்தொடர ஆசைப்படுவார்கள். ஊக்குவித்தல், பாராட்டு வழங்குதல் , பரிசுகள்வழங்குதல் வாழவின் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும் . கணிப்பு என்பதுஅவர்களை இனம் கண்டு அது தொடர்பான வார்த்தைகளில் வாழ்த்துக்கூறி, கைதட்டி, அவர்களைஉற்சாகப்படுத்தலாம். நிச்சயமாக மாணவர் கற்றல் சார்ந்த விடயத்தில் ஊக்கல் உடையவனாகமாற்றமடைவான்.

இது, மனிதர்களின் தேவையாக இருப்பதால் , மாணவர்களுக்கு மட்டுமல்ல

 உடன் வேலை செய்பவர்களிடம், பயணங்களில் , உறவினர்களிடம், குடும்பத்தில் என மனித மனங்கள்நிறைந்த இடத்திலும் நாம் கையாளலாம்.

 

சுயத்திறனியல் தேவை

சுயமாக தனது திறனைக்கண்டு அது தன்னால் முடியுமென அவர்களே தீர்மானித்துக்கொள்ளக்கூடியதன்மைதான் சுயத்திறனியல் தேவையாகும்.

 

உடல், பாதுகாப்பு, அன்பு , கணிப்பு நிறைவேற்றியபின் இதில் கவனம் செலுத்தவேண்டும். பாடங்களைத்தேர்வுசெய்வது, விளையாட்டுத்துறையை தேர்வு செய்வது , போட்டிகளை தேர்வு செய்து அதில் தன்னைஉட்படுத்திக்கொள்ள எண்ணும்போது, அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். உனக்கு இது வராது, தேவையா, என்று எதிர்மறை எண்ணங்களோடு அணுகாமல் அவர்களுக்கு நேரம் கொடுத்து, அதில் திறன்களைவளர்க்க பாதை அமைத்துத்தருவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடமையாக இருக்கிறது.

 6.நுண்ணறிவு

 கல்வி அறிவாகி, அறிவு மாணவர்கள் மத்தியில் நுண்ணறிவாக மாறவேண்டும். அதில்தான் சுயதிருப்திகிடைக்கும். ஒரு பாடம் நடத்தும்போது அது தொடர்பான சிந்தனைகளை மாணவர்களே சிந்திக்க செய்யவேண்டும். அப்போது அவர்களுக்கு அது தொடர்பான கேள்விகள் , புரிதல்கள் கிடைக்கும். அந்தகேள்விகளுக்கு தகுந்த பதில் அளித்து, புரிதல்கள் சரியானதா என்பதை புரிய வைத்து, சிறந்தவழிகாட்டியாக ஆசிரியர்கள் வளரக்க வேண்டும். வரும் தலைமுறையினரை சுயமாக சிந்தித்து, அவர்களின்விருப்பத்திற்க்கு தகுந்த பாடத்தில் சிறக்க வைத்து ஒரு நல்ல குடிமகனாக உருவாக்க மாசலோவின் இந்தபடித்தரங்களை நம் வாழ்வில் அறிந்து, நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் முன்னேற்றப்பாதையில்கொண்டு செல்ல ஏதுவான இந்த கோட்பாட்டினை பின்பற்ற வேண்டும்.