படித்தவர்கள் எத்தனையோ பேர் வேலையில்லாமல்
இருக்கையில் படிக்காத விபரமில்லாதவர்களை தமிழ்நாடு வஃக்ப் வாரியம் பணியமர்த்தி
உள்ளதா?
வாரியத்தில் இருந்து அனுப்பும் ஒரு கடிதத்தில் முகவரியை முழுமையாக
எழுத்தத் தெரியாதவர்கள் தான் தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைமையகத்தில்
பணியமர்த்தப்பட்டுள்ளனரா?
கடந்த மாதம் 16-09-2024 அன்று வாரியத்தின்
உதவிச் செயலாளர் கையொப்பமிட்டு அஞ்சல் செய்ய கொடுக்கப்பட்ட கடிதம் 05-10-2024
அன்று சென்னை GPO வில் பதிவஞ்சல்
செய்யப்பட்டுள்ளது.
வஃக்ப் வாரிய அலுவலர்களுக்கு அவ்வளவு அலட்சியமா?
16-09-2024 அன்று வாரிய செயலாளர் கையொபமிட்ட அந்தக் கடிதத்தில் மனுதாரர் கோரிய தகவல்களை கடிதம் கண்ட 7 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது ஆனால் கடிதம் கிடைத்ததோ 08-10-2024 அன்று. 22 நாள் தாமதமாக கிடைத்துள்ளது.
அலட்சியமாக பணியாற்றும் வஃக்ப் வாரிய அலுவலர்களை கண்டிப்பார்களா?
புதிதாக வாரியத் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் அருமை சகோதரர் ஜனாப்
நவாஸ் கனி அவர்கள், அலட்சியமாக நடந்து கொள்ளும் வஃக்ப் வாரிய அலுவலர்களை கண்டிப்பார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்.